நீ மட்டும் வரவில்லை ஏன் ?

வேதனை வந்தது

ஓய்வாமை வந்தது

கண்ணீரும் வந்தது,

உன் நினைவுகள் வந்ததும்

அதில் என்

மூச்சும் மெதுவாய் மிதந்தது.

எல்லோரும் வந்தனர் உன்னைத் தவிர

நீ மட்டும் வரவில்லை ஏன் ?

 

நீ இல்லாமல் என் சோகம்

தனிமையில் வாடுது

எல்லாம் இருந்தும்

இல்லாத நிலை எங்கும் பரவுது,

எல்லாம் இருந்தும்  என் விதியில்

உன் பெயர் மட்டும்  எழுதவில்லையே.

 

எவ்விதம் கொண்ட ஓர் விதி இதுவோ

வேதனை ஒன்றுதான் இதில் உள்ளதோ

தனிமையும் இதில் வந்து குடி கொள்ளுதோ

தவம் அதில் நான் கொள்ள அது எண்ணுதோ ?

 

காயங்கள் வந்தது

சிதைவுகள் வந்தது

மாலையும் வந்தது

இரவும் தான் வந்தது .

உறங்காமல் இருந்தும்

உன் கனவுகள் அதிலும் இதமாய் மிதந்தது

எல்லோரும் வந்தனர் உன்னை த்தவிர

நீ மட்டும் வரவில்லை ஏன் ?

 

Translation to Tamil by Sundareswaran   Date: 28th March 2019.  Can it be sung in raag Sahaanaa?

Courtesy;  Lyric:  ‘dard aaya, tadap aayi

Ashq aaye, yaad aayi

Phir Rukte rukte saanz bhi aayi’

Lyricist; A M Turaaz   Music: Amaal Mallik

Film: BADLA

 

Thanks for the inspiration.

 

Leave a comment