கங்கை யமுனை சங்கமத்தின்

சாந்தம் ச்வேதம் த்ரிநேத்தரம் ரஸ புஜ ஸ்த்திதம்

வாமே கவுர்ய ஸமேதம் சசிதர முகுடம்  தம் ஸுகஸி  நமிதே

 

 கங்கை யமுனை சங்கமத்தின்   நடனம்  துவங்கும்  

மங்களமாம் வர்ண மேடையில்,  த்ருத தாளம்

 

கங்கை யமுனை சங்கமத்தின்  நடனம் துவங்கும்  

மங்களமாம் வர்ண மேடையில்  த்ருத  தாளம்

குழலில் இனிமையான கீதம் ஒன்று கரானாவில் உணர

பசுமையான காதல் கவிதை  சஹானாவில் மலர

குழலில் இனிமையான கீதம் ஒன்று கரானாவில் உணர

பசுமையான காதல் கவிதை  சஹானாவில் மலர

மனது நிறைந்த மனம் குளிரும் ரதி மஹோத்சவம்

வீணை நாதம்  தாள வாத்தியம் பணிவோடதில் சேர

பதங்களோடு  சுவடு வைத்து அழகாய்  வரும் என்

வடிவானவள்  ப்ரியமானவள்  மயில்போல் இவள் நடனம்

 

கங்கை யமுனை சங்கமத்தின்  நடனம் துவங்கும்  

மங்களமாம் வர்ண மேடையில்  த்ருத  தாளம் த்ருத  தாளம் த்ருத  தாளம்

  

 காலை நேரம் மஞ்சள் பூசும் நீல வர்ண  மேகம்

எனது தூதுபோகும் ஹம்ஸமாக

பனி உருகும் மண் தறையில் புன்னகை புரிந்துகொண்டு

நீ எனக்கு மனம் கவரும் தும்ரி யானாய்

 

இரு மனதிலும் குளிர் அலை தரும்  ஜிலும் ஜிலும்

ஜதிகளில் வரும் மொழி எங்கும் அதைத்தேட

இரு மனதிலும் குளிர் அலை தரும் ஜிலும் ஜிலும்

ஜதிகளில் வரும் மொழி எங்கும் அதைத்தேட

 

விழி மூடிய நேரமதில் உதடுகளின் கவி பாடிடும் தேன் அமுதை

பருகி பருகி ஒன்று சேரும் தேகம்   

விழி மூடிய நேரமதில் உதடுகளின் கவி பாடிடும் தேன் அமுதை

பருகி பருகி ஒன்று சேரும் தேகம்   

நிலா ஒளிதன்னில் உயிர் பெறுமந்த இனிய  காதல் லீலைகள்

 

அலையில் பொங்கும் நுரைபோலது 

கடல்போன்ற கசலில்  இணையும்  சுதந்திரமாக

 

..ஆஆஆஆ

 

இனிமை பொங்கும் புதுமை கொஞ்ச தனிமையில் என்றும்.

 

கங்கை யமுனை

ஆ கங்கை யமுனை

இனிமை பொங்கும்

கங்கை யமுனை  சங்கமத்தின் நடனம் துவங்கும்  

மங்களமாம் வர்ண மேடையில்  த்ருத  தாளம்  

 

 பொன் யமுனையில் என் சகி அவள் 

வெண்ணிலவில் சேர்ந்திணைந்து       முழு நிலவானாள்

மார்கழியில் கோபுரங்கள் வட்டமிடும்

இரவுநேர புறாக்கள் போல்  பரி பூரணம் கொண்டாள்

 

ஸ்ருதி தரும் மன சுகங்களில் தினம் தினம் 

ஒலி  ஏழுமந்த கால் சலங்கை தாளமாய்

ஸ்ருதி தரும் மன சுகங்களில் தினம் தினம் 

ஒலி  ஏழுமந்த கால் சலங்கை தாளமாய்

  

இமை எழுதும் விழி மொட்டுகள் புது ஒளி  ஒன்றணிய     

பனி ச்சாரல் போல் அதில்  நாணம் வந்து மறைய

இமை எழுதும் விழி மொட்டுகள் புது ஒளி  ஒன்றணிய     

பனி ச்சாரல் போல் அதில்  நாணம் வந்து மறைய

 

கனிவுடன் வரும் காதலால் என்  விரல் பட இவள் சிவக்க   

பனி பொழியும் போல் ஓர் இன்பம் அங்கே  சேர

 

..ஆஅ..

மனதில் இதளில் அறியா ஒரு புது நிறம் அதில் பரவ

 

கங்கை யமுனை சங்கமத்தின்  நடனம் துவங்கும்  

மங்களமாம் வர்ண மேடையில்  த்ருத  தாளம் த்ருத  தாளம் த்ருத  தாளம்

தாளம்…………………………………………..   

  

சுந்தரேச்வரன்  Date: 5th July 2016.  

 Courtesy: Lyric: “Chandanamani sandhyakaLude thiru nadayil”

Lyricist:  Girish Puthanchery    Film: Praja  Singer: M G Srikumar

I have never learned this much literature in Malayalam. Kudos to Girishji. Sir you will remain immortal in my heart. It took time for me to get words in Tamil.

 

From the depth of ocean you took the pearls and made a garland of words

But I, standing on the shores could collect only few pebbles

And with that I spread out on the shore itself to see what it is.

 

Beautifully choreographed and displayed. സ്വതന്ത്രമായ്  എല്ലോർക്കും വിട്ടുകൊടുത്തപോലെ ഒരു തോന്നൽ എൻ മനസ്സിൽ ഉദിച്ചു .എല്ലാവരും അതിൽ നന്നായി അഭിനയിച്ചു.

Thanks for the inspiration to translate in Tamil with some changes in lines.

 

Please link with https://www.youtube.com/watch?v=C-lHPG3sWHw to listen to the original Malayalam version.

 

Leave a comment