ஸ்வரங்கள் எல்லாம் ஒன்றுசேர
ஸ்ருதி லயங்கள் தாளத்துடன்
சங்கீதம் இங்கு பிறந்துவந்ததே .
இதை உணர மனதில் இன்பம் பொங்க
என்னை மறந்து நான் இருக்க
உணர்ச்சி பொங்க மெய்சிலிர்த்ததே .
மனதில் கவலை கொந்தளிக்க
கோயில் வாசல் முன்னே நான் நிற்க்க
கடவுளை, கண்டபொழுதில்
மனம் குளிர்ந்ததே
இயற்க்கை அழகை நான் ரசிக்க
இன்பக் கனவில் நான் மிதக்க
இன்னும் வாழவேண்டும் என்று
இதையம் சொன்னதே.
சுந்தரேச்வரன் date: 4th October 2015
Advertisements